Wednesday, April 14, 2010

பத்தாம் ஆண்டு விழா

அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா பெப்ரவரி மாதம் 18ஆம் தேதி துபாய் பெண்கள் உயர் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது

விழாவில் பத்தாம் ஆண்டு விழா மலரை நடிகரும் தொழிலதிபருமான ஆர்.கே வெளியிட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பெற்றுக்கொண்டார்.

சிறுமியரின் கண்கவர் நடனங்கள், ரோபோ ஷங்கர், சிவகார்த்திகேயன் ஆகியோரது நகைச்சுவை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின.

விழாவின் சிறப்பு நிகழ்வாக கோபிநாத் நடத்திய ‘வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை சுவையானதா?சுமையானதா?’ என்ற விவாத அரங்கமும் நடைபெற்றது

No comments:

Post a Comment