Wednesday, April 14, 2010

அமீரகத்தின் `சிறந்த தமிழ்ப்பெண்மணி-2010`


அமீரகத் தமிழ் மன்றம் அமீரகத்தில் முதன் முறையாகப் பெண்கள் மட்டுமே மேடையில் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடவிருக்கிறது


வரும் 23ஆம் தேதி துபாய் உயர் தொழில்நுட்பப் பெண்கள் கல்லூரியில் அரங்கேறவிருக்கும் இந்தப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு அனைவரையும் அமீரகத் தமிழ் மன்றம் அன்புடன் அழைக்கிறது

விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகையும் பாடலாசிரியையுமான ரோஹினி கலந்து கொள்ளவிருக்கும் இவ்விழாவில் அமீரகத்தில் இருந்து கொண்டு சமூகத்திற்குத் தொண்டாற்றும் சிறந்த மகளிரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அமீரகத்தின் `சிறந்த தமிழ்ப்பெண்மணி-2010` விருது வழங்கும் நிகழ்ச்சியும் அரங்கேறவிருக்கிறது இதற்காக அமீரகத்தில் சமூகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் நான்கு பெண்மணிகளை அமீரகத் தமிழ் மன்றம் அடையாளம் கண்டிருக்கிறது வாக்களிப்பு மூலமாகவும், நடுவர் குழு மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பெண்மணி விழாவின் போது சிறப்பிக்கப்படுவார்

உங்கள் வாக்குகளை அமீரகத் தமிழ் மன்றத்தின் வலைத்தளத்திற்குச் சென்று வழங்குங்கள். அமீரகத்தில் சமூகத் தொண்டாற்றி வரும் பெண்களை உற்சாகப்படுத்துங்கள்.

அமீரகத் தமிழ் மன்றம்

“இனியொரு விதி செய்வோம்”


எதிர்வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் “இனியொரு விதி செய்வோம்” என்ற மகளிர் மட்டும் பங்கு பெறும் நிகழ்ச்சி அரங்கேறவிருக்கிறது.


துபாயில் அமைந்துள்ள பெண்கள் உயர் தொழில்நுட்பக்கல்லூரி அரங்கில் வைத்து நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகை ரோஹினி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்

அமீரகத்தில் சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களில் சிறந்தவர்களுக்கு அமீரகத்தின் ”சிறந்த தமிழ்ப் பெண்மணி-2010” விருதினை வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன

இதைப்போன்றே ”சுவையரசி-2010” என்ற விருதை சமையல் கலையில் மிகச் சிறந்து விளங்கும் இல்லத்தரசிகளுக்காக அமீரகத் தமிழ் மன்றம் வழங்கவிருக்கிறது

குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள், மகளிர் அரங்கேற்றும் குறுநாடகம், சிறுமியருக்கான நாகரிக மேடைஉலா இன்னும் மகளிர் பங்கு பெறும் பல்வேறு சுவையான நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன

அனுமதி இலவசமென்றாலும் முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள atmuae@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

பத்தாம் ஆண்டு விழா

அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா பெப்ரவரி மாதம் 18ஆம் தேதி துபாய் பெண்கள் உயர் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது

விழாவில் பத்தாம் ஆண்டு விழா மலரை நடிகரும் தொழிலதிபருமான ஆர்.கே வெளியிட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பெற்றுக்கொண்டார்.

சிறுமியரின் கண்கவர் நடனங்கள், ரோபோ ஷங்கர், சிவகார்த்திகேயன் ஆகியோரது நகைச்சுவை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின.

விழாவின் சிறப்பு நிகழ்வாக கோபிநாத் நடத்திய ‘வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை சுவையானதா?சுமையானதா?’ என்ற விவாத அரங்கமும் நடைபெற்றது

வணக்கம்!!

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உள்ளங்களுக்கு

வணக்கமும் வாழ்த்துகளும்!!

கடந்த பத்தாண்டுகளாக அமீரகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்தின் வலைப்பூவிற்கு உங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்

2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் ஓர் உணவகத்தில் இணையம் வழி அறிமுகமான பத்து நண்பர்கள் கூடிப் பேசியபோது உருவானதுதான் ‘அமீரகத் தமிழ் இணைய நண்பர்கள் அமைப்பு’

அந்த காலகட்டத்தில்  கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ் இணையம் என்ற மின் மடல் குழுவில் எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் கணினியில் தமிழ் குறித்த விழிப்புணர்வை அமீரகத்தில் இருப்பவர்களுக்கு உருவாக்குவதற்காக உருவான இவ்வமைப்பு பின்னர் மெல்ல மெல்ல விரிவடைந்து ‘அமீரகத் தமிழ் மன்றம்” எனப் பெயர் மாற்றம் கண்டு இப்போது பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது

இந்தச் சூழலில் இந்த அமைப்பின் செயல்பாடுகளையும் இவ்வமைப்பில் எல்லா வருடமும் வெளியிடப்படும் ஆண்டு மலர்களில் வெளியான சிறந்த படைப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இவ்வலைப்பூ

மீண்டும் சந்திக்கிறோம்!