Wednesday, April 14, 2010
“இனியொரு விதி செய்வோம்”
எதிர்வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் “இனியொரு விதி செய்வோம்” என்ற மகளிர் மட்டும் பங்கு பெறும் நிகழ்ச்சி அரங்கேறவிருக்கிறது.
துபாயில் அமைந்துள்ள பெண்கள் உயர் தொழில்நுட்பக்கல்லூரி அரங்கில் வைத்து நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகை ரோஹினி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்
அமீரகத்தில் சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களில் சிறந்தவர்களுக்கு அமீரகத்தின் ”சிறந்த தமிழ்ப் பெண்மணி-2010” விருதினை வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன
இதைப்போன்றே ”சுவையரசி-2010” என்ற விருதை சமையல் கலையில் மிகச் சிறந்து விளங்கும் இல்லத்தரசிகளுக்காக அமீரகத் தமிழ் மன்றம் வழங்கவிருக்கிறது
குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள், மகளிர் அரங்கேற்றும் குறுநாடகம், சிறுமியருக்கான நாகரிக மேடைஉலா இன்னும் மகளிர் பங்கு பெறும் பல்வேறு சுவையான நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன
அனுமதி இலவசமென்றாலும் முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள atmuae@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment